முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் நூலானது செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15 அன்று விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் வெளியிடவுள்ளார். தனது ஆட்சியின் இலக்கணமாக ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து முழங்கி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தைத் தொகுத்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக் கழகம் சார்பில் நூல் வெளியிடப்பட உள்ளது. 144 பக்கம் கொண்ட இந்நூலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘திராவிட மாடல்’ நூலை வெளியிடுகிறார்.
கழகப் பொருளாளரும், நாடாளுமன்றத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர். பாலு முதல் நூலை பெற்றுக் கொள்கிறார். தமிழகத்தின் விடியலுக்கும், தமிழினத்தின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக அமையும் ‘திராவிட மாடல்’ கோட்பாட்டு நூலானது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிந்தனைக் கொடையாக அமையும்.