தயவுசெய்து இளைஞர்கள் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள் என இன்றைய தலைமுறையினருக்கு நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் டேனியின் தியேட்டர் ஸ்டுடியோவின் நடிப்புப் பட்டறையின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராதா ரவி, நடிகைகள் அபர்நதி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விழா மேடையில் நடிகர் ராதா ரவி பேசியதாவது:
”பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற சிறிய குழுக்களை பாராட்ட வேண்டும். இவர்களில் இருந்து யாரேனும் ஒருவேளை புரட்சித்தலைவராகவோ காதல் மன்னனாகவோ வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். யூடியூபர்கள் எல்லாம் பெரிய இடத்திற்கு தான் வருவீர்கள் என்றால் ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாகமாறிவிடும் சின்ன இடம் பெரிய இடமாக மாறிவிடும், அதுதான் வாழ்க்கை.
தயவுசெய்து இளைஞர்கள் தாய் தந்தையர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். கடைசி வரை வைத்து காப்பாற்றுங்கள். அவர்கள் ஆசீர்வாதம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஒரு குட்டி கதை சொல்கிறேன்.
ஒரு அம்மா, அவனுடைய மகனுக்கு திருமணம் ஆகி முதல் இரவில் அவன் அவனுடைய அம்மாவிடம் வந்தான். அவன் தனது அம்மாவிடம் தனது மனைவி முதியோர் இல்லத்தில் உன்னை சேர்க்க சொன்னாள் என்று கூறினான். உடனே அந்த தாய் மகனே உனக்கு இப்போது தான் திருமணம் நடந்துள்ளது. உனக்கு குழந்தை பிறக்கட்டும் என்று சொன்னார்.
அந்த மகனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அம்மா இப்போது நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க, அதற்கு அந்த அம்மா தற்போது தான் மகன் பிறந்துள்ளான். அவன் ஒரு மருத்துவராக வந்துவிடட்டும், அதற்கு பிறகு நான் அனாதை ஆசிரமத்திற்கு செல்கிறேன் என்று தெரிவித்தார்.
பிறகு அவன் ஒரு இன்ஜினியராக மாறிவிட்டார். அப்போது அந்த தாயிடம் இப்போது அனாதை ஆசிரமத்திற்கு செல்கிறாயா என்று கேட்க, உன் மகனுக்கு திருமணம் ஆகட்டும் என்று தாய் கூறினார். அதற்கு பிறகு முதல் பேரனுக்கு திருமணமாகிவிட்டது. அன்று இரவு அந்த தாய் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அந்த தாயின் மருமகள் வந்து அவரது காலை சுரண்டுகிறான். அந்த தாய் தனது மருமகளிடம் என்ன என்று கேட்டாள். புதுசா வந்த என் மருமகள் என்ன முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறாள் என்று கையைப் பிடித்துக் கொண்டாள். இது ஒரு சைக்கிள்.” என்று குட்டி ஸ்டோரியுடன் தனது உரையை முடித்துக்கொண்டார்.