பிறந்த நாளின்போது தனக்கு வாழ்த்து சொல்ல தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், உடன் பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகேள் என தொடங்கியுள்ளார். தனது பிறந்த நாளன்று சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை என குறிப்பிட்டுள்ள அவர், உங்களுடைய அன்பும், ஆதரவும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே சமயத்தில் தான் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்க தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை நான் காண இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால் தற்சமயம் தனது பிறந்த நாளுக்காக நீங்கள் சிரமப்பட்டு பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்து விடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில், நீங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முண்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே எனக்கு நீங்கள் அளிக்கின்ற சிறந்த பிறந்தநாள் பரிசாக மனதார ஏற்று கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். அதுவே மறைந்த ஜெயலலிதாவுக்கும், தனக்கும் அளிக்கும் பிறந்த நாள் பரிசாக எண்ணுகிறேன் என கூறியுள்ளார்.
தொண்டர்கள் பொறுமையோடு இருங்கள் ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்து கொண்டு இருக்கிறது. இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களையும், உண்மையானவர்களையும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேம் என தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்