டெலிகிராமில் விரைவில் ஸ்டோரிஸ் பதிவிடும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அதன் நிறுவனர் துரோவ் அறிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அதிமகாக உலாவுவோரின் அதிக விருப்பமுள்ள தேர்வு Stories Share செய்வது. அது வாட்ஸ் ஆப்-ஆக இருந்தால் ஸ்டேட்டஸ் வடிவத்திலும், இன்ஸ்டாவாக இருந்தால் Storie-ஆகவும் சேர் செய்து உலகத்தோடு இணைந்திருக்கின்றனர். இப்படி Stories Share செய்வதால் பல வருடங்கள் தொடர்பில் இல்லாதோரைக் கூட நாள் தோறும் பார்த்து பழகும் உணர்வை பெற முடிகிறது என்பதே நெட்டிசன்களின் கருத்தாக இருக்கிறது. இந்த நெட்டிசன்களை கவர வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டா கிராம் ஆகியவை அடுத்தடுத்து புது அப்டேட்டுகளை அறிவித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக போட்டி களத்தில் நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என டெலிகிராமும் கோதாவில் இறங்கியுள்ளது. இதன்படி செய்தியிடல் செயலியான டெலிகிராம் விரைவில் ஸ்டோரிகளை அறிமுகப்படுத்தும் என்று அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் அறிவித்துள்ளார். இந்த சேவை தற்போது சோதனைக்கட்டத்தில் இருப்பதாகவும், ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அதோடு துரோவ் தனது டெலிகிராம் சேனலில், Stories தொடர்பாகவே அதிக கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
டெலிகிராமில் அறிமுகப்படுத்த உள்ள ஸ்டோரிஸ் பகுதி புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் வசதிகளை கொண்டிருக்கும். அதோடு முன் மற்றும் பின்பக்க கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி என வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டாவுக்கு கடுமையாக போட்டிக்கொடுக்கும் வகையில் டெலிகிராம் தயாராகியுள்ளது.
இதுமட்டுமல்லாது ஸ்டோரிஸ் காலாவாதியாகும் நேரம் 6,12,24 மற்றும் 48 மணி நேரம் அல்லது நிரந்தரமாக வைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டெலிகிராம் அறிமுகம் செய்யும் வசதிகள் நெட்டிசன்கள் இடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







