29.2 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக – விசிக தொகுதிப் பங்கீடு: நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

திமுக-விசிகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில்,  திமுக – மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திமுக – விசிக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அன்றே (மார்ச் 2) நடைபெற இருந்தது. ஆனால் அன்றைய தினம் திட்டமிட்டபடி, பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில் திமுக-விசிகவிற்கு இடையேயான 2ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை (மார்ச் 6) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக தொடர்ந்து 2 தனி தொகுதியும், 1 பொது தொகுதியும் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக 2 தனி தொகுதிகளை மட்டுமே தர முன்வந்துள்ளதால் இழுபடி நீடிப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி 12-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading