”விஷம் போல் உயரும் விலைவாசி”- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

விஷம் போல் நாட்டில் விலைவாசி உயர்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் சமையல் எரிவாயு…

விஷம் போல் நாட்டில் விலைவாசி உயர்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தருமபுரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 250 ரூபாயாக மட்டுமே இருந்ததாக கூறினார். ஆனால் தற்போது அது 750 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தென்பெண்ணை ஆற்றியில் இருந்து தூள் செட்டி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம், சுயநலத்திற்காக தள்ளிவைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். நான்கு மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply