29.7 C
Chennai
May 20, 2024
தமிழகம் செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பு – கிராம மக்கள் திடீர் போராட்டம்!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ரெட்டிபட்டி ஊராட்சி சாலபாளையத்தில் ஜல்லிக்ட்டு போட்டி நடத்த ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மவாட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, போட்டி நடத்த உரிய அனுமதி வழங்கப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading