ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ரெட்டிபட்டி ஊராட்சி சாலபாளையத்தில் ஜல்லிக்ட்டு போட்டி நடத்த ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் நீதிமன்றம் அனுமதி அளித்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மவாட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, போட்டி நடத்த உரிய அனுமதி வழங்கப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
—-அனகா காளமேகன்