அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழு கலைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகை, குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே மேற்கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தலைவர் உட்பட 6 பேர் கொண்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திட்டங்களை செயல்படுத்த புதிய குழு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வெளியிட, தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.