இயக்குநர் மாரி செல்வராஜ் நகைச்சுவை படங்களும் இயக்க வேண்டும் என ‘மாமன்னன்’ படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு பேசினார்.
மாமன்னன் திரைப்படம் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். படத்தின் 50-வது நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர்கள், வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
அப்போது பேசிய நடிகர் வடிவேலு, 30 படம் இயக்கிய பண்பை, மாரி செல்வராஜிடம் பார்த்தேன். மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மேலும் மேலும் வளர வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன், வலி இருந்தது. ‘மாமன்னன்’ போன்ற நிறையப் படங்களை எடுக்க வேண்டும்.
மாரி செல்வராஜுக்கு ஒரு வேண்டுகோள்… நகைச்சுவை படங்களும் இயக்க வேண்டும். இதையே எடுத்து உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என ‘மாமன்னன்’ படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் நடிகர் வடிவேலு பேசினார்.







