தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பூதிநத்தம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வந்த கடையை மூடக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு கடையை அடித்து உடைத்து சூறையாடினர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ளது பூரிநத்தம் கிராமம்.இங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் தான் அரசு மதுபான கடை உள்ளதால் மது குடிப்போர் அங்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டிய நிலை இருந்தது.இதனை சாதமாக பயன்படுத்திய சமூக விரோதிகள் சிலர் பெரியூர்,பூதிநத்தம்,பிக்கிலி,கொல்லப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.மேலும் இவர்கள் டன் கணக்கில் மது பானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.
இதனால் இப்பகுதியில் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் இளம் வயதினர் அதிகளவில் மதுவுக்கு அடிமையாகி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் குற்றசம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பலமுறை பாப்பாரப்பட்டி
காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்ஒன்றுதிரண்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்து கடையை நடத்தி வந்த ஜெயராமன் வீட்டை அடித்து உடைத்தனர். மேலும் மதுபானங்களை தரையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—வேந்தன்