ஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவையில் போக்குவரத்துக் காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து…

கோவையில் போக்குவரத்துக் காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை பீளமேடு காவல் நிலைய சிக்னலின் அருகே சென்று கொண்டிருந்தபோது தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, அந்தப் பள்ளி வாகனத்தை நிறுத்தி மோகனசுந்தரம் தட்டி கேட்டுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த சிங்காநல்லூர் போக்குவரத்துக் காவலர் சதீஷ், பள்ளி வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் மோகனசுந்தரத்தைத் தாக்கியுள்ளார். இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து, மோகனசுந்தரம் மாநகர் காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். காவலர் ஸ்விக்கி ஊழியரைத் தாக்கும் வீடியோ வைரலான நிலையில், காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவலர் சதீஷ் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், காவல் நிலைய பிணையில் சதீஷ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு போலீஸ் முகநூல் பக்கத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கோவை பீளமேடு போக்குவரத்துக் காவலர் சதீஷ் , ஸ்விக்கி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை எடுக்கப்பட்டது குறித்து தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.