”ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன்” – எடப்பாடி பழனிசாமி!

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன் என்று அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின்உரிமைகளுக்காக போராடிய முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் ஆவார். இன்று அவருடைய நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

” ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும், தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்று போராடிய, சமரசமற்ற சமூகநீதி போராளி; “கல்வியே ஒடுக்கப்பட்டவரின் பேராயுதம்” என முழங்கிய புரட்சியாளர், ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில், அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.