ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தில் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் அதாவது மார்ச் 8 முதல் 11ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்லலாம் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது. எனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.







