பழனியில் திருக்கோயிலுக்கு சொந்தமான பலநுாறு ஆண்டுகள் பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது திரு ஆவினன்குடி என அழைக்கப்படும் பழனி திருக்கோயில். இக்கோயிலின் தீர்த்தமாக திரு ஆவினன்குடி தெப்பக்குளம் விளங்குகிறது. இத்தெப்பக்குளம் வையாபுரி குளத்தை ஒட்டிய பகுதியில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படி ஒரு தெப்பக்குளம் இருப்பதே பழனி வாழ் மக்களுக்கு தெரியாமல் உள்ளது.
கடந்த 1960-ஆம் ஆண்டுவரை பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடி கோயிலுக்கு சென்று வந்த நிலையில் நகரின் வளர்ச்சி, பக்தர்கள் வருகை அதிகரிப்பு, நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணத்தால் தெப்பக்குளமானது சிறிதுசிறிதாக காணாமல் போனது. தற்போது தெப்பக்குளம் இருந்த இடம் வையாபுரி கண்மாயின் ஒரு பகுதியாக மாறி குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவு நீர் கலக்கும் இடமாகவும் மாறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து பழனி கோட்டாட்சியர் சிவக்குமாரின் தீவிர முயற்சியால் தெப்பக்குளம் இருந்து தெரியவந்ததை அடுத்து அரசின் வரைபடத்தின் மூலம் குளத்தின் இருப்பிடமும் கண்டறியப்பட்டது. தெப்பக்குளத்தை மீட்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர், இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு துார்வாரி ஆழப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
தெப்பக்குளத்தை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
—அனகா காளமேகன்