35.7 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பணிநிரந்தம்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மின்வாரிய பயிற்சி வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட அப்ரண்டிஸ் பணியாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய கோரி மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு மின்சார வாரியத்தில் பயிற்சி பெற்று பணி புரிந்த அப்ரண்டிஸ் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 45,000 பணியிடங்கள் உள்ளது. அதில் குறிப்பாக இருக்கக்கூடிய 25,000 பணியிடங்களில் வேலை பார்க்க கூடிய ஊழியர்கள் கடைநிலை ஊழியர்கள், இந்த பணியிடங்களுக்கு கடந்த 2016 க்கு பின்பு ஆட்கள் எடுக்கப்படவில்லை.

மாறாக அரசே அப்ரண்டிஸ் என்று சொல்லக்கூடிய மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்த பணியாளர்களை, தமிழக வேலைவாய்ப்பு தளம், அதாவது employment webiste மூலமாகவும், பொது இடங்களில் விளம்பரபடுத்தியும் மின்சார வாரியத்தில் பணி புரிய அப்ரண்டிஸ் தேவை என்று விளம்பரபடுத்தியும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி வருகிறது என்றும், அவ்வாறு பணியமர்த்த கூடிய தங்களில் இருக்க கூடிய நபர்கள் வருட வருடம் மாற்றப்பட்டு வருவதாகவும், அவர்களை நிரந்தரபடுத்தாத நிலை நீடிப்பதாகவும் கூறுகின்றனர். இதனால், ஐடி, Diploma, BE போன்ற படிப்புகளை முடித்துவிட்டு இங்கு அப்ரண்டிஸ் ஆக வேலை பார்த்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்,  2019ல் விடபட்ட 2900 களப்பணியாளர்களுக்கான காலியிடத்தை இன்னும் நிரப்பவில்லை என கூறி, அப்ரண்டிஸ் சட்ட திருத்தம் 2014ன் படி மின் வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களை முன்னுரிமை அடிப்படையில், மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என மின்வாரியத்திடம் கோரிக்கை விடுத்து அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்வாரிய நல சங்க மாநில பொதுசெயலாளர்,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு இந்நாள் வரை நிரந்தர வேலை தரவில்லை. வெறும் 7750 சம்பளத்தில் நாங்கள் அனைவரும் ஊர் விட்டு ஊர் வந்து பணி செய்து வருகிறோம். இதே போல பயிற்சி முடித்து எங்களை வருடம் வருடம் வெளியே அனுப்பும் வகையில், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த சட்டமன்ற கூட்டத்தில் எங்களுக்காக யாரும் பேசவில்லை என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading