தமிழகம்பக்திசெய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்திருவிழா கடந்த 17.ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் (அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர்) 11 நாட்கள் தீப திருவிழாவில் காலை மற்றும் மாலை  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மேலும் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அண்ணாமலையார் கருவறை
அருகில் அதிகாலை 4 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி
தீபம் ஏற்றப்படும். அதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இதனை காண தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து 40 லட்சத்திற்கு மேல்
பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில்  தேவையான அடிப்படை வசதிகள்  செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Web Editor

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

Jeba Arul Robinson

குன்னூர் – உதகை மலை ரயில் இன்று ரத்து

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading