தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேரம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனை பெறும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பரமனியம் தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பரமணியன், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் கொரோனா பரவல் அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகை அதிகம் உள்ள டெல்லி போன்ற இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.