மொசாம்பிக் நாட்டை தாக்கிய #Chido புயல்… உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

மொசாம்பிக் நாட்டில் சிடோ புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்ததுள்ளது. இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த சிடோ…

Cyclone #Chido hits Mozambique… death toll rises to 73!

மொசாம்பிக் நாட்டில் சிடோ புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்ததுள்ளது.

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த சிடோ புயல் இந்திய பெருங்கடல் பகுதியில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டை என்ற புயல் தாக்கியது. புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இந்த புயலின் தாக்கத்தால் 39 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். மொசாம்பிக் நாட்டில் சிடோ புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கபா டெல்கொடா மாகாணத்தில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.