ஐபிஎல் கோப்பையுடன் முதலமைச்சரை சந்தித்த சிஎஸ்கே அணி உரிமையாளர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் ஆகியோர் சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ரூபா குருநாத், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் ஆகியோர் சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை அணி களம் இறங்கியது. ஜடேஜா உள்ளிட்ட வீரர்களின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். அப்போது சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.