சிவகாசியில் , மகளிர் தினத்தை பட்டாசு தொழிலாளர்கள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலாக விளங்குகிறது பட்டாசு உற்பத்தி. இந்த தொழிலில் 80 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி ஒரு பிரதான தொழிலுக்கு முதுகெலும்பாக உள்ள பெண் பட்டாசு தொழிலாளர்கள் ,
தங்களது பட்டாசு ஆலை வளாகத்தில் ஒன்று கூடி, மகளிர் தினத்தை கேக் வெட்டி
கொண்டாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும், பட்டாசு தொழில் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாக, இந்த மகளிர் தினத்தில் மகிழ்ச்சியோடு உறுதி ஏற்றுக்கொண்டுள்ளதாக, பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
-கு.பாலமுருகன்