29 C
Chennai
December 9, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர், தொற்று அதிகம் உள்ள பகுதிகளை சிறு கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரிக்க அறிவுறுத்தி இருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தலாம் என்றும், கொரோனா தடுப்புக்கு  எடுக்கப்பட்டுள்ள, எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy