’பப்ஜி’ மதனுக்கு ஜூலை 3- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” (Free Fire) எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து, மதன் என்பவர் யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியது.
விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ (Chat) செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, மதனை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவான அவரை, தருமபுரியில் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சென்னைக்கு அவரை அழைத்து வந்த போலீசார், விசாரணைக்குப் பின், சென்னை சைதாப் பேட்டை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். ஜூலை 3 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.