33.5 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,83,036 ஆக உயர்ந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 33 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34,428 ஆக அதிகரித்தது. சிகிச்சையில் இருந்த 1,892 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை நலம்பெற்றவர்கள் எண்ணிக்கை 25,28,209 ஆக அதிகரித்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 20,399 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கோவையில் 249, ஈரோட்டில் 183, சென்னையில் 217, செங்கல்பட்டில் 119, தஞ்சையில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்ற மாவட்டங்களில் 100 கீழாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading