கொரோனா தொற்று: 441 பேர் ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 லட்சத்து 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 970 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 441 பேர் ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை நேற்றுடன் ஒப்பிடுகையில் 44 ஆயிரம் பேர் கூடுதலாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.