நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 874 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சமீபகாலமாக வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு, தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 49 ஆயிரத்து 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 874 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 148 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 281 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா