முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சை கருத்து – விக்கிராவண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், விக்கிராவண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், விக்கிராவண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி இறந்ததை தொடர்ந்து,
அத்தொகுதிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலையொட்டி கஞ்சனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரமேஷ், சீமான் மீது விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் வழக்கு விசாரனையை அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.