வெனிசுலாவில் கடந்த மாதம் (ஜூன்) 24 அன்று, அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவானது. கடும் சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலநடுக்க பாதிப்புகளால் ஏராளமானோர் பலியாகினர்.
இந்த நிலையில் வெனிசுலா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,700-ஐ தாண்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின் படி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளது, படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 16,740 ஆகும். நிலநடுக்கங்கள் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின் படி, நிலநடுக்கங்களின் போது நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 50,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.




