சென்னை போரூரில் தொழிலில் நஷ்டத்தால் கட்டுமான நிறுவன உரிமையாளர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் கோ.பாலகிருஷ்ணன் (54). இவர் ஐ.சி.எஃப்பில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வங்கியில் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்று கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஜூன்25ம்தேதி இரவு வீட்டின் அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அறையின் உள்ளே சென்று பார்த்த அவரது மனைவி கோபாலகிருஷ்ணன் துாக்கிட்டு இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.