ஆஸ்கர் அகாடமி விருது குழுவில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட 398 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சினிமாத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் அகாடமி விருதுகள் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரையுலக கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பட்டியலை மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. இதற்காக 398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்