ஆஸ்கர் தேர்வுக் குழுவில் மணிரத்னம்.. ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்கள்.!

ஆஸ்கர் அகாடமி விருது குழுவில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட 398 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சினிமாத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் அகாடமி விருதுகள் என்றழைக்கப்படும் ஆஸ்கர்…

ஆஸ்கர் அகாடமி விருது குழுவில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட 398 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சினிமாத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் அகாடமி விருதுகள் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரையுலக கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பட்டியலை மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடமி வெளியிட்டுள்ளது. இதற்காக 398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 13 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்கர் அகாடமி குழுவில் சூர்யா, கஜோல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் இணைந்தனர். தனது நண்பரும், இயக்குநருமான மணிரத்னம் ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் கரண் ஜோகர் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில் குமார், திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், பாடலாசிரியர் சந்திர போஸ் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கர் அகாடமி குழுவில் 10,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.