பாஜக கொடுத்த புகாரை அடுத்து பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் முனவர் பரூக்கியின் நிகழ்ச்சி மீண்டும் ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் முனவர் பரூக்கி. இந்தி திரைப்பட உலகம், இந்திய கலாச்சாரம் உள்ளிட்டவற்றை கலாய்த்து அவர் அடிக்கும் காமெடிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சமூக வலைதளங்களில் அவர் நிகழ்ச்சிக்கு மவுசு அதிகரிக்க, இந்தியா முழுவதும் பிரபலமானார், பரூக்கி. இந்த வருட தொடக்கத்தில் இந்து தெய்வங்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரை கைது செய்தது மத்திய பிரதேச போலீஸ். பிறகு ஜாமீனில் வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரில் உள்ள குட் ஷெப்பர்ட் ஆடிட்டோரியத்தில் அவருடைய ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அது திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குர்கானில் உள்ள, ஐரியா மாலில் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை காமெடி திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் பரூக்கியின் நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அவர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா மாநில பாஜக பிரமுகர் அருண் யாதவ் என்பவர், குருகிராம் போலீசில் புகார் அளித்தார். அதில், இந்து தெய்வங்களுக்கு எதிராக பரூக்கி பேசி வருவதாகவும் அவர் செயல்பாடு இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக இருப்பதாகவும் கூறி அவர் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் இருந்து பரூக்கியின் பெயரை, ஏற்பாட்டாளர்கள் நீக்கியுள் ளனர். கடந்த சில மாதங்களாக, ராய்ப்பூர், சூரத், அகமதாபாத், வடோதரா, கோவா, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற இருந்த பரூக்கியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.