கோவை பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு 25 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்!

ஆடி 3வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஆடி 3வது வெள்ளிக்கிழமையை ஒட்டி அனைத்து அம்மன் ஆலயங்களிலும்…

ஆடி 3வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மனுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

ஆடி 3வது வெள்ளிக்கிழமையை ஒட்டி அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவை கவுண்டம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மன் கோயிலில் ஓவ்வொரு வார ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து வருகின்றனர்.

இதில் ஆடி 3வது வாரமான இன்று 2000 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர். மேலும் மாலைகளாகவும் தோரணங்களாகவும் ரூபாய் நோட்டுக்களை தொங்க விட்டிருந்தனர்.

இதற்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 208 பெண்கள் பங்கேற்க விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் விளக்கேற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். விளக்கு வழிபாட்டினை விஜயா தொடங்கி வைத்தார். விளக்கு பூஜையை சிவனடியார் சிவத்திரு ராமு தமிழ் வழிபாடு முறைப்படி நடத்தி வைத்தார்.

விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு சில்வர் தட்டு, குங்குமச் சிமிழ் ஆகியவற்றை 33 வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணன் வழங்கினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகராஜ், ஜெகதீஷ், மணி, லோகு, பால்ராஜ் உள்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.