காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

புதுக்கோட்டையில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர்…

புதுக்கோட்டையில் ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணியாக சென்றனர்.

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, ரூ. 6,941 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கனவான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்கும், விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளம் பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.