36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுநீரகம் பாதித்த சிறுமிக்கு நேரில் ஆறுதல் கூறிய முதலமைச்சர்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஜனனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்- ராஜநந்தினி தம்பதியின் மகள் ஜனனி. இவர் அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி அவருக்கு இரு சிறுநீரகமும் செயலிழந்தது. பின்னர் ஜனனிக்கு அவரது தாயின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டது. ஆனால், அது செயல்படாமல் போகவே செய்வதறியாது திகைத்த அவர்கள் ஜனனியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். மேலும் சிறுமிக்கு உதவிகரம் நீட்ட வேண்டும் என வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வாயிலாகவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி சிறுமி ஜனனி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும் சிறுமிக்கு தொலைப்பேசி வாயிலாகவும் அவர் ஆறுதல் கூறினார். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்ற அவர் சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு, சிகிச்சை முறை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading