திரிபுராவின் அகர்தலா பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலால் பலர் காயமடைந்ததுடன் அப்பகுதிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவின் அகர்தலா பகுதியில் நடந்த பாஜக கட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது பாஜக – காங்கிரஸ் ஏற்பட்ட கலவரத்தால் பலர் காயமடைந்ததுடன், பாஜக அலுவலகம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இந்த கலவரத்தின் போது பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு மாறிய சுடிப் ராய் பர்மன்-க்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து பேசிய காவல் அதிகாரி, “ஆளும் பாஜகவினருக்கும் காங்கிரஸினருக்கும் இடையே முதலமைச்சரின் தொகுதியில் மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பாஜக அலுவலகம் ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளது. நடந்த இந்த சம்பவத்திற்கு யார் முக்கிய காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த திடீர் கலவரத்தை கண்டித்து இரு தரப்பினருமே பேரணி நடத்தினர். அந்த பகுதியில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடந்த பேரணியை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தின் முதலமைச்சர் தொகுதியில் கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.