நாள்தோறும் தமிழ் சினிமாவில் சுவாரஸ்யங்களுக்குக் குறைவின்றி பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அப்படியிருக்க இன்றைய சினிமா செய்திகளை மொத்த தொகுப்பாகப் பார்ப்போம்.
ஜெயம் ரவி:
தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவி, தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ‘சைரன்’, ‘ஜெ.ஆர்.30’ உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான, நடிகர் ஜெயம் ரவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.எனவே நான் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
இதேபோல் என்னுடன் சமீபத்தில் நேரில் தொடர்பு கொண்டவர்கள் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக முககவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.
வாரிசு:
வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அந்த பாடல் ரிலீஸ் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சூர்யா:
நடிகர் சூர்யா திடீரென கர்நாடகாவை சேர்ந்த 500 ரசிகர்களை, பெங்களூரில் உள்ள கான்ராட் ஹோட்டலில் சந்தித்தார். ஹோட்டலில் குவிந்த 500 ரசிகர்களுடனும் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன்:
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ராட்சச மாமனே வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே சோழா சோழா என்ற பாடல் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்திலிருந்து ராட்சச மாமனே என்ற பாடல் வெளியாகியுள்ளது.
ஸ்ருதி ஹாசன்:
நடிகை ஸ்ருதி ஹாசன் அடுத்ததாக ‘தி ஐ’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஹாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். டேப்ன் ஸ்மோன் இயக்கும் இப்படத்தில் ‘தி லாஸ்ட் கிங்டம்’ பட புகழ் மார்க் ரோஸ்லே நடித்துவருகிறார்.. தற்போது க்ரீஸ் நாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நடிகை அஞ்சலி:
நடிகை அஞ்சலி சேலை அணிந்துகொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஞ்சலி தற்போது இயக்குநர் ராம் இயக்கி வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.