வீட்டுக் காவலில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்?

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு ஆசிய நாடான சீனாவின் அதிபராக நீண்ட காலமாக பதவி வகித்துவருபவரும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜீ ஜின்பிங், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத…

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு ஆசிய நாடான சீனாவின் அதிபராக நீண்ட காலமாக பதவி வகித்துவருபவரும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவருமான ஜீ ஜின்பிங், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ஊடகங்கள் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. சீன மக்கள் விடுதலை ராணுவம், ஜின்பிங்கை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது.

சீனாவில் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அதிபர் ஸீ ஜின்பிங்கை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.

சீன மனித உரிமை ஆர்வலரும் தற்போது அமெரிக்காவில் இருப்பவருமான ஜெனிஃபர் ஜெங், வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், “செப்டம்பர் 22ம் தேதி சீன மக்கள் ராணுவத்தின் வாகனங்கள் பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஹவுன்லாய் கவுன்டியில் இருந்து ஹெபெய் மாகாணம் உல்ள ஜன்க்ஜியாகெள நகர் வரை சுமார் 80 கிலோ மீட்டர் வாகனங்கள் அணிவகுந்துச் சென்றன. இதனிடையே, சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஜின்பிங்கை நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன” என்று ஜெனிஃபர் ஜெங் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சீனாவில் 60 சதவீத விமானங்கள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சீன அதிபர் ஸீ ஜின்பிங், பெய்ஜிங் நகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? என்ற வதந்தியை சரிபார்க்க வேண்டும். உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் சமீபத்தில் ஸீ ஜின்பிங் இருந்தபோது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை மக்கள் ராணுவத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வீட்டுக் காவல் அரங்கேறியிருக்கிறது. எனவே, வதந்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன” என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.