சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செ யங் 21-14 , 21-13 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார். இது சிந்துவின் தொடர்ச்சியான எட்டாவது தோல்வியாகும்.







