தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டதையடுத்து, முதல்வரின் உருவத்தை தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளால் வரைந்து சமூக ஆர்வலர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக கடந்த 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசு தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்று வரும் நிலையில், மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில அரசின் பாடலாக அறிவித்தற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவத்தை வரைந்து வித்தியாசமான முறையில் சமூக ஆர்வலரான அசோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
வரும் பொங்கலுக்குள் முதல்வருக்கும் இந்த வரைப்படத்தை தபால் மூலமாக அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். சமூக ஆர்வலரான அசோக்குமார் அரசுப்பேருந்துகளில் படிக்கட்டில் மாணவர்கள் பயணிக்க கூடாது என பள்ளிகள் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, மாவட்ட நிர்வாகத்தின் தன்னார்வலராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.