பாரதியாரின் கனவை, திராவிட மாடல் ஆட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி
நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அரங்கில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் பாரதியார் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பி கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய எம்.பி கனிமொழி, “பாரதியார் கண்ட கனவு, இந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கெல்லாம் நியாயம் கிடைக்க வேண்டும்; சமூக நீதி கிடைக்க வேண்டும்; ஆணும், பெண்ணும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே. இந்த கனவைத் தான் திராவிட மாடல் ஆட்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சியில், தமிழ் எழுத்தாளர்களுக்கும், இந்த மண்ணிற்காக பாடுபட்டவர்களுக்கும் அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கப்படுகிறது. இதுதான் தமிழுக்கான, தமிழருக்கான ஆட்சி. நமது மண்ணின் அடையாளங்களை, தமிழ் மண்ணின் வாழ்க்கையை, இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்களைக் கொண்டாடக்கூடிய ஆட்சி. அதனால்தான் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பாரதியைக் கொண்டாடக்கூடிய அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
– ஜெனி