அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் அதிகாலை 3மணி அளவில் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதேபோல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்டரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீகரீதியாகவும், அரசியல் மற்றும் சட்டரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்தார்.