சத்தீஸ்கர் : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் கோலப்பள்ளி காவல் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ரிசர்வ் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்ததும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனாலல் பாதுகாப்பு படை வீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக சுக்மா மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கிரண் சவால் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சத்தீஸ்கரில் இந்த ஆண்டு 284 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுக்மா, பிஜப்பூர், தாண்டிவாடா உள்பட 7 மாவட்டங்களில் 255 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 27 பேர் கரிதாபாத் மாவட்டத்திலும், சவுக்கி மாவட்டத்தில் 2 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.