சென்னை மாநகராட்சி ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி ரூ.100 கோடி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் மாதம் 5 கோடி ரூபாய் வீதம் 20 மாதங்களுக்குள்ளாக மின்கட்டண நிலுவைத் தொகையை செலுத்த சென்னை மாநகராட்சிக்கு, மாநில நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை செலுத்துமாறும், உள்ளாட்சி அமைப்புள் வைத்திருக்கும் பழைய நிலுவைத் தொகையை உரிய வழிமுறைகளை பின்பற்றி வசூலிக்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் நிலுவை வைத்திருக்கும் மின் கட்டணம் குறித்து கண்காணிக்கவும் வசூலிக்கவும் அனைத்து விவரங்கள் அடங்கிய தகவல் பலகை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், நீண்ட நாட்களாக பயனற்ற மின் இணைப்புகள், தேவையற்ற மின் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.