46 நொடியில் 26 தர்பூசணி பழங்களை காலால் உடைத்து சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான உதயகுமார் என்ற இளைஞர், கந்தன்சாவடியில் இயங்கி வரும் ஒ.எம்.ஆர் டேக்வோண்டா தற்காப்புக்கலை அகாடமி மூலம் பயிற்சி பெற்று வந்தார். இவர் 46 நொடிகளில் 26 தர்பூசணி பழங்களை காலால் உடைத்து, புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உதயகுமாரின் இந்த புதிய சாதனையைப் பாராட்டி உலக சாதனை சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
உதயகுமார் இதற்கு முன்பு டேக்வோண்டா தற்காப்புக்கலை மூலம் மூன்று முறை கின்னஸ் உலக சாதனைகள், 2 உலக சாதனைகள் படைத்து இந்தியாவுக்காக 5 தங்கப்பதக்கங்கள், தமிழ்நாட்டுக்காக 10 தங்கப்பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளதார்.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.