29.2 C
Chennai
May 20, 2024
தமிழகம் செய்திகள்

கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிலம்ப கழகம் கோரிக்கை!

தமிழக அரசு கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க கோரி சென்னையில் நடந்த தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சாமி, துணைத் தலைவர் முருகக்கனி ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முருக கனி கூறியதாவது, தமிழ்நாடு சிலம்ப கழகத்திற்கென அரசு உரிய அங்கீகாரம்
வழங்க வேண்டும்.கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு சிலம்பம் சேர்க்கப்பட்டும் இதுவரை யாரும் விளையாடவில்லை. இதுகுறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விளையாட்டுத் துறை அமைச்சராக மெய்யநாதன் இருக்கும்போது முதற்கட்டமாக மூத்த சிலம்ப ஆசான்கள் நூறு பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் தருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை தரவில்லை.அதை உடனடியாக அரசு செய்ய வேண்டும்.பாரம்பரிய கலைகளை பற்றி பேசுவதை விட சிலம்பத்தை பாதுகாக்க சிலம்ப ஆசான்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிலம்பத்திற்கு உரிய அங்கீகாரம் அளித்தால் தமிழ்நாடு முழுவதும் சிலம்ப போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தருவோம் என கூறினார்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading