சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்

“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய செயல் முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை…

“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய செயல் முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கப் பயணிகள் மெட்ரோ இரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், பயணச்சீட்டு வழங்கும் பக்கத்திற்குச் செல்ல முடியும். இந்த பக்கத்தில், பயணிகள் செல்ல வேண்டிய மெட்ரோ இரயில் நிலையத்தையும், பணம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்யலாம். UPI மற்றும் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டு கட்டணத்தைச் செலுத்தலாம்.

அண்மைச் செய்தி: ‘புகார் அளித்தவரைக் கைது செய்த விவகாரம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு! – மாநில மனித உரிமை ஆணையம்’

“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையின் தொடக்கமாக, QR டிக்கெட்டில் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இன்று கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.