சென்னை ஐஐடியில் மாணவர் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஐஐடி மூடப்பட்டுள்ள நிலையில், விடுதியில் தங்கி, ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்…

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஐஐடி மூடப்பட்டுள்ள நிலையில், விடுதியில் தங்கி, ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஐஐடி வளாகத்திலுள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டு பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்தார். அப்போது எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்து அவர், கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது. கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு, 2021-ஆம் ஆண்டு ஐஐடியில் பிராஜெக்ட் அசோசியெட் படிப்பில் சேர்ந்துள்ளார்.இதனால், வேளச்சேரியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உன்னிகிருஷ்ணன் இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.