செங்கல்பட்டு அருகே அடர்ந்த புதர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பனை மரங்கள் எரிந்து சாம்பலாகின.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் பகுதியில் புதர்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் நான்கு பனை மரங்கள் எரிந்து நாசமாயின.
வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் நிலையில் காய்ந்த சிறகுகளில் ஏற்பட்ட தீயானது, அடர்ந்த புதர் பகுதிகளில் முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது. அருகில்
இருந்த பனை மரங்களின் ஓலைகளில் ஏற்பட்ட தீ மல மலவென பரவி நான்கு பனை மரங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் தீயணைப்புத்துறையினர் பனைமரம் மற்றும் புதர்களை சுற்றி தண்ணீரைப் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள்
கொண்டு வந்தனர். புதர்கள் நிறைந்த பகுதியில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்