யூபிஎஸ்சி தேர்வில் செயற்கை நுண்ணறிவான சாட் GPT, 54 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதனை போல் செயல்படும் இந்த சாட் ஜிபிடியின் திறமையை சோதனை செய்ய யுபிஎஸ்சி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
யுபுஎஸ்சி தேர்வானது இந்தியாவில் நடத்தப்படும் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாகும். சிவில் சர்விஸ் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி (UPSC ) தேர்வின் முதல்நிலைத் தேர்வில் ChatGPT தோல்வியடைந்துள்ளதாக அனாலிட்டிக்ஸ் இந்தியா இதழ் கூறியுள்ளது. UPSC முதல்நிலை தேர்வில் 2022ன் கேள்வித் தாள் 1 (செட் ஏ) இலிருந்து 100 கேள்விகளுக்கு பதிலளித்த சாட் சாட் GPT, 54 கேள்விகளுக்கு மட்டுமே சரியாக பதிலளித்துள்ளது.
இதன்அடிப்படையில், 87.54 கட் ஆஃப் அடிப்படையில் சாட் GPTயால் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. தற்போது உலகின் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த சாட் GPT, குறைந்த கால அளவிலேயே பிரபலமாகி விட்டது. உலகில் உள்ள அனைத்து கேள்விகளுக்கான பதில்களையும் கொண்டுள்ளதாகக் கூறப்படும் இந்த சாட் GPT, உலகெங்கிலும் உள்ள மிகவும் கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) திட்டத்தின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றது முதல் அமெரிக்க மருத்துவத் தேர்வில் வென்றது வரை, ChatGPT தனது திறமையை நிரூபித்துள்ளது. இதேபோல் முயற்சிக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வில் சாட் GPT தோல்வியடைந்துள்ளது.







