தூத்துக்குடி மாவட்டம் , ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்
கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி
தேரோட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணியின் கரையோரம் ஸ்ரீவைகுண்டத்தை
சுற்றி ஆன்மிக சிறப்பு பெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன.
இதில் ,108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் ஒன்பதாவது
ஸ்தலமாகவும், குருவுக்கு அதிபதியானதுமான ஆழ்வார்திருநகரியில்
ஆதிநாதர் மற்றும் சுவாமி நம்மாழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு பங்குனி பிரம்மோற்சவப் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்தாண்டிற்கான திருவிழா கடந்த
27ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 தினங்கள் நடைபெறும்
இத்திருவிழாவில் , நாள்தோறும் “தாயார்கள் சமேத ஸ்ரீபொலிந்து நின்றபிரான் ”
பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீதி உலா வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொலிந்து நின்றபிரான் காலை
06.40க்கு மேல் 7.30 க்குள் மேஷ லக்னத்தில் தேரில் ஏழுந்தருளினார். தொடர்ந்து
அழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர் மற்றும் ஆச்சார்ய பெருமக்கள் தேர்
வடம் பிடிக்க, பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுடன் தேரை இழுத்தனர்.
மேலும், பங்குனி உத்திரத்தில் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி
நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர்,
தக்கார் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். இந்த நிகழ்வில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
—- கு.பாலமுருகன்