32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றது!” – இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியது. சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரும், பிரக்யா ரோவரும் வெற்றிகரமாக பிரிந்து சென்று, தங்களது பணிகளை சிறப்பாக செய்து வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிலவில் இருந்து அனுப்பிய புகைப்படங்களை அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வந்தது. இந்நிலையில், பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் SLEEP MODE-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி குறைந்ததால் விக்ரம் லேண்டர் SLEEP MODE-க்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டரில் இருந்து அனைத்து தகவல்களும் பெறப்பட்டு விட்டதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை

G SaravanaKumar

சரிவுப் பாதையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி -ரகுராம் ராஜன்

Web Editor

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்!

Halley Karthik